Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு ஐபில் இந்தியாவில் இல்லையா?

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (13:13 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் என்றால் அது மிகையில்லை. சுமார் இரண்டு மாத காலம் நடைபெறும் இந்த போட்டிகளை கோடிக்கணக்கான மக்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 12வது ஐபிஎல் தொடர் போட்டிகளை மார்ச் 29, முதல் மே 19, வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் வேறு நாட்டில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தபோது தென்னாப்பிரிக்கா மற்று துபாயில் ஐபிஎல் போட்டிகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அடுத்த ஆண்டும் துபாயில் இந்த போட்டி நடைபெற வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து  பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியபோது, நாங்கள் எந்தவொரு சூழலுக்கும் தயாராக உள்ளோம். தேர்தல் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டால், போட்டிகள் துபாய்க்கு மாற்றப்படும். துபாயின் நேரம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றதாக இருக்கும். எனவே துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மைதானங்களில் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments