Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் – ஆரம்பித்தது 2 ஆவது ஒருநாள் போட்டி !

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (07:31 IST)
இந்தியா நியுசிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் பிடிக்க தீர்மானித்துள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அதே வேகத்தோடு நியுசிலாந்து சென்று அங்கும் வெற்றியோடு கணக்கை ஆரம்பித்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி நியுசிலாந்தை 157 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.

அதையடுத்து இன்று தொடங்கவுள்ள இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. முதல் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களோடு இந்த போட்டியிலும் இந்தியா களமிறங்க இருக்கிறது. நியுசிலாந்தில் சாண்ட்னர் மற்றும் சவுத்தி நீக்கப்பட்டு சோதி மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி
விராட் கோலி(கே), ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், அம்பாத்தி ராயுடு, எம்.எஸ். தோனி, கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர், சஹால், குல்தீப் யாதவ், புவனேஷவர் குமார், ஷமி

நியுசிலாந்து அணி
மார்ட்டின் குப்தில், காலின் மன்ரோ, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டிம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ், காலின் டி கிராண்ட்ஹோம், பிரேஸ்வெல்,சோதி, பெர்ஹுசன், ட்ரண்ட் போல்ட்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments