Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிக்ளேர் செய்த இந்தியா, 2வது இன்னிங்ஸிலும் விக்கெட்டை இழந்த இலங்கை!

டிக்ளேர் செய்த இந்தியா, 2வது இன்னிங்ஸிலும் விக்கெட்டை இழந்த இலங்கை!
, திங்கள், 14 மார்ச் 2022 (08:05 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து உள்ளது. இதனை அடுத்து இலங்கை அணி தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்களுக்கு அவுட் ஆனது என்பதும் இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் இருந்த போது டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்சில் ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்களும் ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்தனர்
 
இந்த நிலையில் 447 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கிய நிலையில் 28 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து உள்ளது. இன்னும் அந்த அணி 419 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

28 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட்: இந்தியா 2வது இன்னின்ங்ஸ் ஸ்கோர்!