Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி சதம்.. இமாலய இலக்கு.. திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்..!

Siva
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (16:01 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த் நகரில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் குறைவான ரன்களை எடுத்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் சூடு பிடித்துள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 534 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் எடுத்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. நாதன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகியுள்ளார்.  கேப்டன் பேட் கம்மின்ஸ் இரண்டு ரன்களிலும், லாபு சாஞ்சே மூன்று ரன்களில் அவுட் ஆகியுள்ளனர். உஸ்மான் காவாஜா மூன்று ரன்களுடனும் களத்தில் அவுட்டாகாமல் உள்ளார்.

12 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலியா அணி இன்னும் 522 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளது. இதனால், இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகும் என கூறப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments