Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை சதத்தை நோக்கி ஜெய்ஸ்வால்.. 2வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் அசத்தல்..!

Siva
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (10:01 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் முதல் இன்னிங்ஸில் மிக குறைந்த ஸ்கோர் மட்டுமே எடுத்தன. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சுதாரித்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இரட்டை சதம் நோக்கி சென்று கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஸ்வால் தற்போது 141 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல். ராகுல் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ராகுலின் அவுட்டுக்குப் பிறகு, ஜெய்ஸ்வாலுடன் இணைந்து படிக்கல் பேட்டிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவை விட 321 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இன்று முழுவதும் பேட்டிங் செய்து 500 ரன்கள் இலக்காக நிர்ணயித்து டிக்ளேர் செய்தால், வெற்றி பெற வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments