Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடர்… இந்திய அணி அறிவிப்பு… கோலிக்கு ஓய்வு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடர்… இந்திய அணி அறிவிப்பு… கோலிக்கு ஓய்வு!
, வெள்ளி, 1 ஜூலை 2022 (15:36 IST)
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இது சமம்ந்தமாக அணி வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இப்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரால் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவருக்கு பதிலாக பூம்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் தற்போது டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்

ரோஹித் ஷர்மா, ருத்துராஜ், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா,  ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக்,  ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்திப் சிங், உம்ரான் மாலிக்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு… இந்திய அணியில் நடந்த முக்கிய மாற்றம்!