Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு… இந்திய அணியில் நடந்த முக்கிய மாற்றம்!

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு… இந்திய அணியில் நடந்த முக்கிய மாற்றம்!
, வெள்ளி, 1 ஜூலை 2022 (15:13 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டெஸ்ட் போட்டி சற்று முன்னர் தொடங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இது சமம்ந்தமாக அணி வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இப்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரால் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவருக்கு பதிலாக பூம்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

சற்று முன்னர் போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் களமிறங்கிய விளையாடி வருகின்றனர். புஜாரா தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல வருடங்களுக்கு பின் சென்னையில் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி!