Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம் போல் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; 3 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (19:06 IST)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தொடங்கியுள்ளது.
 
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முன்னரே வெளியேறினர்.
 
இதையடுத்து களமிறங்கிய புஜாரா 14 ரன்களின் வெளியேறினார். தற்போது இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியும், துணை கேப்டன் ரஹானேவும் விளையாடி வருகின்றனர்.
 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இங்கிலாந்து அணியை பலமாக மாற்றிய கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments