Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!
, புதன், 26 ஜூலை 2017 (16:06 IST)
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 


 
 
இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. 
 
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங் தேர்வு செய்தது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 289 வது வீரர் என்ற பெருமை பெற்றார் ஹர்திக் பாண்டியா. 
 
முகுந்த், தவான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முகுந்த் 12 ரன்களில் வெளியேறினார். பின்னர் புஜாரா உதவியுடன் தவான் 190 ரன்கள் எடுத்த அவுட்டானார். 10 ரன்களில் இரட்டை சத்தை தவரவிட்டார்.
 
தேனீர் இடைவேளை வரை இந்திய அணி, முதல் இன்னிங்சில், 2 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா மற்றும் கோலி களத்தில் இருந்தனர். 
 
தற்போது புஜாரா சதத்தை கடந்து களத்தில் உள்ளார், கோலி அவுட்டாகியதால் ரஹானே களமிறங்கியுள்ளார். 67 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு