ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் நிறுத்தம்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (15:33 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 
 
இந்த நிலையில் இந்திய அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பெய்தது. இதனை அடுத்து மைதானம் கவர்களால் மூடப்பட்டுள்ளது 
 
மழை விட்டவுடன் ஆட்டம் தொடருமா? அல்லது மழையால் ஆட்டம் தடைபடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இன்னும் சில மணி நேரங்களில் மழை நின்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு மீண்டும் போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments