ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற ரோஹித் சர்மா அதிரடி முடிவு..!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (14:34 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மோத உள்ளதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.  பாகிஸ்தான் ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று இரண்டு புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் இந்தியா இன்று தனது முதல் போட்டியை விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த நிலையில்  இன்றைய போட்டி நடைபெறும்  மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments