Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றி பெற 245 ரன்கள் மட்டுமே: தொடரை வெல்லுமா இந்தியா?

வெற்றி பெற 245 ரன்கள் மட்டுமே: தொடரை வெல்லுமா இந்தியா?
, செவ்வாய், 19 ஜனவரி 2021 (07:49 IST)
வெற்றி பெற 245 ரன்கள் மட்டுமே: தொடரை வெல்லுமா இந்தியா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிரிஸ்பேன் நகரில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 245 ரன்களில் உள்ளன என்பதும் கையில் 9 விக்கெட்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து இந்திய அணி 336 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட் ஆனார். இன்னும் 245 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும் என்பதும் கையில் 9 விக்கெட்டுகளை இந்தியாவிடம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தற்போது கி9ல் 64 ரன்களுடனும் புஜாரா 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2-1 என்ற வித்தியாசத்தில் வெல்லும் என்பதால் தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிஸ்பேன் மைதானம் சிட்னி போல அல்ல… இந்தியாவை எச்சரிக்கும் ஸ்டீவ் ஸ்மித்!