Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஷப் பண்ட் ரன் அவுட்: 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்!

Advertiesment
இந்தியா
, செவ்வாய், 16 மார்ச் 2021 (20:11 IST)
ரிஷப் பண்ட் ரன் அவுட்: 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் மூன்றாவது 20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் வழக்கம்போல் டக் அவுட்டானார். ரோகித் சர்மாவும் இன்று 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இஷான் கிஷான் எதிர்பாராத வகையில் 4 ரன்களில் அவுட் ஆக, ரிஷப் பண்ட் துரதிஸ்டவசமாக 25 ரன்களில் ரன் அவுட்டானார் 
 
இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 27 ரன்களிலும் ஸ்ரேயாஸ் அய்யர் 9 ரன்களிலும் விளையாடி வருகின்றனர். சற்றுமுன் வரை இந்திய அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து அணியின் மார்க்வுட் 2 விக்கெட்டுகளையும் ஜோர்டான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்… இளம் வீரருக்காக கோலி செய்த காரியம்!