Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா இங்கிலாந்து தொடர்… இந்த போட்டிகளுக்கு மட்டும் ரசிகர்களுக்கு அனுமதி!

இந்தியா இங்கிலாந்து தொடர்… இந்த போட்டிகளுக்கு மட்டும் ரசிகர்களுக்கு அனுமதி!
, செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:12 IST)
இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி எதிர்வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டம் 5ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்திலிருந்து முன்கூட்டியே வரும் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்பட அனைத்து டெஸ்ட் போட்டிகளைக் காணவும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அதனையடுத்து நடக்கும் டி 20 போட்டிகளுக்கு குறைந்த அளவில் பார்வையாளர்களை அனுமதிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காபா டெஸ்ட்டில் கலக்கிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பொறுப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு!