Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா… மீண்டும் கலக்கிய அக்ஸர் படேல்!

இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா… மீண்டும் கலக்கிய அக்ஸர் படேல்!
, வியாழன், 4 மார்ச் 2021 (15:46 IST)
நான்காவது டெஸ்ட்டின் முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது.  அந்த பிட்ச் இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து விமர்சனங்களுக்கு இடையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்கப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதையடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேனியல் லாரன்ஸ் ஆகியோர் மட்டுமே சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடினர். மற்றவர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தற்போது வரை இங்கிலாந்து அணி 199 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்கள் இழந்துள்ளது. இந்திய அணியின் அக்ஸர் படேல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து: இன்றுக்குள் ஆல்-அவுட் ஆகுமா?