விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

Siva
ஞாயிறு, 30 நவம்பர் 2025 (16:59 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே இன்று நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 300 ரன்களை தாண்டி அபாரமான ஸ்கோரை எட்டியுள்ளது.
 
இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். இதில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னொரு சீனியர் வீரரான ரோஹித் ஷர்மா மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகளுடன் 57 ரன்கள் அடித்துள்ளார்.
 
இந்திய அணி 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா, ஒருநாள் தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments