Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி அபாரம்: சூப்பர் வெற்றி பெற்ற இந்தியா

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (07:41 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு செய்ததால் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 268 ரன்கள் அடித்தது. குல்தீப் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
இந்த நிலையில் 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் 40.1 ஓவர்களில் இரண்டே விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து 269 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 137 ரன்களும், விராத் கோஹ்லி 75 ரன்களும் குவித்தனர். தவான் 40 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 
இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜூலை 14ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments