Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி அபாரம்: சூப்பர் வெற்றி பெற்ற இந்தியா

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (07:41 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு செய்ததால் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 268 ரன்கள் அடித்தது. குல்தீப் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
இந்த நிலையில் 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் 40.1 ஓவர்களில் இரண்டே விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து 269 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 137 ரன்களும், விராத் கோஹ்லி 75 ரன்களும் குவித்தனர். தவான் 40 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 
இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜூலை 14ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments