Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுக்கு 269 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து

இந்தியாவுக்கு 269 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து
, வியாழன், 12 ஜூலை 2018 (20:43 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய முதல் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்கள் எடுத்தது. ஸ்ட்ரோக்ஸ் 50 ரன்களும், பட்லர் 53 ரன்களும் அடித்தனர். 
 
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் இவர் 10 பந்தில் 3 விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரை சீர்குலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா இன்னும் சிறிது நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் குல்தீப்பிடம் சிக்கிய இங்கிலாந்து!