Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்த தீபக் சஹார்: இந்தியா அபார வெற்றி

Webdunia
ஞாயிறு, 10 நவம்பர் 2019 (22:50 IST)
இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்று நாக்பூரில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. இன்றைய போட்டியில் தீபக் சஹார் 3.2 ஓவர்கள் பந்துவீசி, 7 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
 
இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்றதால் முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா: 174/5  20 ஓவர்கள்
 
ஸ்ரேயாஸ் அய்யர்: 62
கே.எல்.ராகுல்: 52
பாண்டே: 22
 
வங்கதேசம்: 144/10 19.2 ஓவர்கள்
 
முகம்மது நயிம்: 81
முகமது மிதுன்: 27

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments