விரைவில் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வேன் - பி.வி.சிந்து நம்பிக்கை

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (15:28 IST)
கடுமையாக முயற்சி செய்து அடுத்தமுறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவேன் என இந்திய பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து கூறியுள்ளார். 



சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து–கரோலினா மரின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். ஆட்டம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் கரோலினா.
 
சிந்து கடுமையாக முயற்சி செய்தும் 21-19, 21-10 என்ற கணக்கில் கரோலினா சிந்துவை வீழ்த்தினார். இதன்மூலம் கரோலினார் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். 

இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை சிந்து அடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா திரும்பிய பிவி சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அடுத்த முறை இன்னும் கடுமையாக முயற்சிப்பேன். நிச்சயம் ஒரு நாள் உலக சாம்பியன் ஆவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் சுதாரித்த மே.இ.தீவுகள்.. சதத்தை நெருங்கிய கேம்ப்பெல்.. ஹோப் அதிரடி ஆட்டம்..!

ஃபாலோ ஆன் ஆன மேற்கிந்திய தீவுகள்.. 2வது இன்னிங்ஸிலும் விக்கெட் இழப்பு.. தொடர்கிறது குல்தீப் வேட்டை..!

குல்தீப் யாதவ், ஜடேஜா அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்தது மே.இ.தீவுகள்..!

4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்.. இந்தியாவுக்கு இன்னொரு இன்னிங்ஸ் வெற்றியா?

டபுள் செஞ்சுரியை மிஸ் செய்த ஜெய்ஸ்வால்.. அதிரடி சதம் அடித்த கில்.. இந்தியா டிக்ளேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments