Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: ஹரியானா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (23:10 IST)
புரோ கபடி போட்டித்தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹரியானா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றன

முதலில் நடந்த ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் ஐந்து இடங்களில் ஒரு அணியாக இருக்கும் பெங்களூரு அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று கருதப்பட்ட நிலையில் ஜெய்ப்பூர் அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. ஜெய்ப்பூர் அணி 41 புள்ளிகளும், பெங்களூரு அணி 34 புள்ளிகளும், எடுத்ததால் பெங்களூரு அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இதனையடுத்து நடைபெற்ற அடுத்த போட்டியில் ஹரியானா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஹரியானா அணி 52 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 32 புள்ளிகளும், எடுத்ததால் ஹரியானா அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இன்றைய போட்டிக்கு பின்னர் டெல்லி, பெங்கால், ஹரியானா, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments