Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 பந்து கிரிக்கெட் லீக்: இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு புதிய முயற்சி

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (22:03 IST)
டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி ஆகிய போட்டிகள் அதிக நாள், நேரம் எடுத்து கொள்வதால் பார்வையாளர்களுக்கு போரடித்து விடுகிறது என்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டி20 போட்டி தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஒருசில மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் என்பதால் இந்த போட்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

இந்த நிலையில் இந்த போட்டியும் சுமார் ஆறு மணி நேரம் நடப்பதால் தற்போதைய அவசர உலகில் ஒரு விளையாட்டிற்காக ஆறுமணி நேரம் செலவு செய்ய மக்கள் தயாராக இல்லை. போட்டியின் இறுதியில் மட்டுமோ அல்லது ரீப்ளே பார்த்தோ மக்கள் திருப்தி அடைந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்த  100 பந்து கிரிக்கெட் லீக் என்ற தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது

இந்த போட்டியில் விளையாட  கிறிஸ் கெய்ல், ரஷித் கான், டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், பாபர் அசாம் உள்பட 165 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், வரும்  20-ந்தேதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வீரர்கள் அடங்கிய முழுப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments