Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வெற்றி கிடைக்கும் போது சம்மட்டி அடியாக இருக்கும்: ஹர்பஜன்சிங்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (07:17 IST)
நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது
 
இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சென்னை அணியின் பக்கம்தான் போட்டி இருந்தது. ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை திடீரென சென்னை அணி தோல்வி முகத்தை அடைந்தது 
 
கடைசி நேரத்தில் கேதார் ஜாதவ்வின் மோசமான ஆட்டம் சென்னை அணியின் தோல்வியை உறுதி செய்தது நேற்றைய தோல்வியை சென்னை ரசிகர்கள் பலர் ஜீரணிக்கவே முடியவில்லை. கையில் கிடைத்த வெற்றியை நழுவ விட்டதால் அணி நிர்வாகிகள் குறிப்பாக கேப்டன் தோனியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்
 
கேதார் ஜாதவ் போன்ற மோசமான வீரர்களை அணியில் வைத்திருந்தால் எப்படி ஜெயிக்க முடியும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை அணியின் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
 
இதுவும் கடந்து போகும். என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது. ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டும் வெற்றி முகம் காணும்போது அந்த அடி சம்மட்டி அடியாக இருக்கும். சிஎஸ்கே திரும்பி வருவதை ஐபிஎல் சரித்திரம் பேசும்’ என்று குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

யார்ரா அந்த பையன்? அசுர பாய்ச்சலில் அஸ்வானி குமார்..! முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments