Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வணக்கம் டா மாப்ள! சிஎஸ்கே அணியில் இருந்து தப்பித்த வீரரின் டுவீட்!

Advertiesment
ஹர்பஜன்சிங்
, வெள்ளி, 15 நவம்பர் 2019 (21:12 IST)
ஐபிஎல் போட்டியின் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளதை அடுத்து ஐபிஎல் அணிகள் ஒருசில வீரர்களை விடுவித்து வருகிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இருந்து சாம் பில்லிங்ஸ், சைதன்ய பிஷ்னாய், துருவ் ஷோரி, டேவிட் வில்லே, மோஹித் சர்மா ஆகிய ஐந்து வீரர்களை விடுவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பால் சிஎஸ்கே அணியில் ஹர்பஜன்சிங் மீண்டும் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குஷியில் ஹர்பஜன்சிங் வழக்கம்போல் தமிழில் ஒரு அட்டகாசமான டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:
 
‘வணக்கம் டா மாப்ள! #CSK டீம் ல இருந்து... இந்த ரிட்டென்ஷன் என்னாலயா இல்ல உங்களாலயா. தமிழ் எத்தனையோ துரோகங்கள், போலிகளுக்கு நடுவுல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு"எல்டோரா". என்னைய சரிச்சு பாத்துடலாம்னு நெனச்சவங்களுக்கு.இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கே ஜெயித்து வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
ஹர்பஜன்சிங்கின் இந்த டுவீட்டுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் குவிந்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் இந்த டுவீட்டுக்கு தொடர்ச்சியாக லைக்ஸ்களை போட்டு வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயங்க் அகர்வால் இரட்டைச்சதம் – முன்னணியில் இந்தியா