Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால்பந்து போட்டியின்போது மோது: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!

கால்பந்து போட்டியின்போது மோது: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!
, வியாழன், 10 டிசம்பர் 2020 (07:49 IST)
கால்பந்து போட்டியின்போது மோது: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!
மெக்சிகோ நாட்டில் நட்பு ரீதியாக இரு அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மெக்சிகோ நாட்டில் நேற்று நடைபெற்ற இருதரப்பு இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் திடீரென வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியதை எடுத்து அதில் உள்ள ஒரு வீரர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எதிரணி வீரர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியல் சுட்டார்.
 
இந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் மற்றும் அவரது குழுவினரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரன் எடுப்பதை தவிர மற்ற எல்லாமே செய்தார்: மேக்ஸ்வெல் மீது சேவாக் குற்றச்சாட்டு