Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபி சந்திரசேகர் தற்கொலையா? திடுக்கிடும் தகவல்

Advertiesment
விபி சந்திரசேகர் தற்கொலையா? திடுக்கிடும் தகவல்
, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (06:15 IST)
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் நேற்று திடீரென மரணம் அடைந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது
 
விபி சந்திரசேகர் தனது மைலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதை சென்னை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று இரவு விபி சந்திரசேகர் தனது அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்றும் இதனால் அவரது குடும்பத்தினர்  சந்தேகம் அடைந்து கதவை தட்டியதாகவும், ஆனால் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது அவர் அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கி பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
 
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
மறைந்த வி.பி.சந்திரசேகருக்கு சவுமியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சேப்பாக் அணி