Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா விதிமுறைகளை மீறிய 5 இந்திய வீரர்கள் – இப்போது தனிமைப்படுத்துதலில்!

கொரோனா விதிமுறைகளை மீறிய 5 இந்திய வீரர்கள் – இப்போது தனிமைப்படுத்துதலில்!
, சனி, 2 ஜனவரி 2021 (17:53 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொரோனா விதிமுறைகளை மீறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியினர் 5 பேர் பயோ பபுளில் இருந்து வெளியேறி கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளனர்.

 துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் அவர்களிடம் கைகுலுக்கி செல்பி எடுத்துள்ளார். மேலும் வீரர்களின் உணவுக்கு தானே பணமும் செலுத்தியுள்ளார். இது சம்மந்தமாக அவர் சமூகவலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து அந்த ஐந்து வீரர்களும் இப்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியின் பண்ணையில் விளைந்த காய்கறிகள் ஏற்றுமதி !!