Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி: ரசிகர்கள் மகிழ்ச்சி

Mahendran
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (16:27 IST)
இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதும் கால்பந்து போட்டி நடைபெற உள்ளன. இதனால் கால்பந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 
 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட இந்த இரண்டு அணிகளும், பல உலகப் புகழ் பெற்ற வீரர்களை பெற்றுள்ளது. குறிப்பாக  ரியல் மாட்ரிட் அணிக்காக ரோனால்டோ, பார்சிலோனாவுக்காக மெஸ்ஸி போன்ற வீரர்கள் விளையாடியுள்ளனர். தற்போது மெஸ்ஸி இன்டர்மயாமி அணியில், ரோனால்டோ அல் நசார் அணியில் விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான கால்பந்து  போட்டி ஏப்ரல் 6ம் தேதி ரவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பல உலகப் புகழ்பெற்ற கால்பந்து பிரபலங்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments