Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய வீரர்களுக்கு சிறப்பு அனுமதி கொடுத்த இங்கிலாந்து அரசு!

இந்திய வீரர்களுக்கு சிறப்பு அனுமதி கொடுத்த இங்கிலாந்து அரசு!
, புதன், 2 ஜூன் 2021 (11:40 IST)
இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்துக்கு நாளை இந்திய வீரர்கள் தனி விமானம் மூலமாக செல்ல உள்ளனர். இங்கிலாந்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்க வேண்டி இருப்பதால் தங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தனர். அதற்கு பிசிசிஐயும் சம்மதித்துள்ளது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் நாளை குடும்பத்தினருடன் சவுத்தாம்ப்டனுக்கு சென்று அங்குள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் வீரர்கள் குடும்பத்துடன் வந்து தங்குவதற்கு இங்கிலாந்து நாட்டு அரசு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. வீரர்களின் குடும்பத்தினர் பயோ பபுள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி உலக கோப்பை போட்டிகளில் கூடுதல் அணிகள்! – ஐசிசி திட்டம்!