Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நூலிழையில் ஃபாலோ ஆனில் இருந்து தப்பிய இங்கிலாந்து!

Advertiesment
இந்தியா
, ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (15:11 IST)
நூலிழையில் ஃபாலோ ஆனில் இருந்து தப்பிய இங்கிலாந்து!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் போட்டியில் இந்தியா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு ஆட்டமிழாந்தது.
 
இதனையடுத்து இங்கிலாந்து அணி இன்னும் 195 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 200-க்கும் குறைவாக பின் தங்கி இருப்பதால் அந்த அணி ஃபாலோ ஆனில் இருந்து தப்பித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து அணியின் பெண்ஃபாக்ஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்து தனது அணிக்காக தனி ஒருவராக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தரப்பில் அஸ்வின் மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.  அக்சர் பட்டேல் மற்றும் இசாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். முகமது சிராஜ் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேக்கல.. இன்னும் சத்தமா..! – ரசிகர்களை விசிலடிக்க சொன்ன கோலி!