Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

38 ரன்களில் 3 விக்கெட்டுக்கள்: அசத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!

38 ரன்களில் 3 விக்கெட்டுக்கள்: அசத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!
, ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (11:27 IST)
38 ரன்களில் 3 விக்கெட்டுக்கள்: அசத்தும் இந்திய பந்துவீச்சாளர்கள்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இதில் ரோஹித் சர்மா மட்டுமே 161 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 16 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது 
 
தொடக்க ஆட்டக்காரரான பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், சிபில் 16 ரன்களிலும் கேப்டன் ரூட் 6 ரன்களிலும் தங்களுடைய விக்கெட்டை இழந்தனர். தற்போது லாரன்ஸ் 9 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

329 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன இந்தியா: பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?