Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பாக்கிச் சுடுதலில் விருது வாங்கிய தமிழக வீராங்கனை..

Advertiesment
இளவேனில் வாலறிவன்

Arun Prasath

, திங்கள், 9 டிசம்பர் 2019 (13:13 IST)
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் டார்கெட் விருதை பெற்றார் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன்

சீனாவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ரைஃபிலில் இந்தியா சார்பாக பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவு தரநிலையில் முதலிடம் பிடித்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு முனிச்சில் நடைபெற்ற விழாவில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு, கோல்டன் டார்கெட் விருதை அளித்துள்ளது.

முன்னதாக பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்விக்குக் காரணம் இதுதான் – அதிருப்தியில் கேப்டன் கோஹ்லி !