Publish Date: Thu, 28 Nov 2019 (09:47 IST)
Updated Date: Thu, 28 Nov 2019 (11:00 IST)
இலங்கையின் வடக்கு மாகாணம் கவர்னராக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்.
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தப்பய ராஜபக்ஷே வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக இலங்கை அணியை சேர்ந்த பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தப்பய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் முரளிதரனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.