Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியில் எடுக்காதது ஈட்டியால் குத்தியது போல இருந்தது! ஆதங்கத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர்!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:50 IST)
இந்திய அணியில் விளையாடி வரும் வீரரான தினேஷ் கார்த்திக் தான் தனது சொந்த மாநிலத்தின் அணியான சிஎஸ்கேயில் தேர்வு செய்யப்படாதது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியில் விளையாட எல்லாத் தகுதிகளும் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியாதது குறித்து வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் ‘2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தேர்வின் போது சி எஸ் கே அணியில் என்னைக் கண்டிப்பாக தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். எனக்கிருந்த சந்தேகம் நான் கேப்டனா? இல்லையா என்பதுதான். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக தோனியை தேர்வு செய்தார்கள். அது எனது நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல இருந்தது. ஆனால் இப்போதும் தோனி தலைமையில் சி எஸ் கே அணியில் விளையாட தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments