Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியில் எடுக்காதது ஈட்டியால் குத்தியது போல இருந்தது! ஆதங்கத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர்!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:50 IST)
இந்திய அணியில் விளையாடி வரும் வீரரான தினேஷ் கார்த்திக் தான் தனது சொந்த மாநிலத்தின் அணியான சிஎஸ்கேயில் தேர்வு செய்யப்படாதது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியில் விளையாட எல்லாத் தகுதிகளும் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியாதது குறித்து வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் ‘2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தேர்வின் போது சி எஸ் கே அணியில் என்னைக் கண்டிப்பாக தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். எனக்கிருந்த சந்தேகம் நான் கேப்டனா? இல்லையா என்பதுதான். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக தோனியை தேர்வு செய்தார்கள். அது எனது நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல இருந்தது. ஆனால் இப்போதும் தோனி தலைமையில் சி எஸ் கே அணியில் விளையாட தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments