1.5 மில்லியனுக்கு தோனி; ஒன்னுமில்லாமல் போன நான்: தினேஷ் கார்த்திக்!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (17:20 IST)
சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று தினேஷ் கார்த்திக் வருத்தம். 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது இந்திய அணியின் சச்சின் மும்பை அணிக்கும், கங்குலி கொல்கத்தா அணிக்கும், சேவாக் டெல்லி அணிக்கும், டிராவிட் பெங்களூரு அணிக்கும் தலைமையேற்று விளையாடினர். அதாவது அவர் அவர் அவர்களது சொந்த மண்ணிற்கு விளையாடினர். 
 
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தேர்வு செய்வார்கள் என்று உறுதியாக இருந்தேன் என தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, 2008 ஐ.பி.எல் ஏலம் நடைபெறும் போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருந்த நான் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தேன். 
 
எனக்கு இருந்த சந்தேகம் அணிக்கு நான் சி.எஸ்.கே கேப்டனா? இல்லையா? என்பது தான். ஆனால் தோனி சென்னை அணிக்காக 1.5 மில்லியனுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று கூறினார். மேலும் சென்னைக்காக விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜா சம்மதித்தால் மட்டுமே அணி மாற்றப்படுவார்: ஐபிஎல் 2026 புதிய விதிகள்..!

உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ள ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!

ஆஹா எல்லா சிம்டம்ஸும் கரெக்டா இருக்கே… ஜட்டுவுடன் செல்ஃபி எடுத்துப் பகிர்ந்த ஜெய்ஸ்வால்!

இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த ரஷித் கான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

இந்திய ஏ அணியில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்.. முத்தரப்பு தொடரில் அறிமுகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments