Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.5 மில்லியனுக்கு தோனி; ஒன்னுமில்லாமல் போன நான்: தினேஷ் கார்த்திக்!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (17:20 IST)
சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று தினேஷ் கார்த்திக் வருத்தம். 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது இந்திய அணியின் சச்சின் மும்பை அணிக்கும், கங்குலி கொல்கத்தா அணிக்கும், சேவாக் டெல்லி அணிக்கும், டிராவிட் பெங்களூரு அணிக்கும் தலைமையேற்று விளையாடினர். அதாவது அவர் அவர் அவர்களது சொந்த மண்ணிற்கு விளையாடினர். 
 
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தேர்வு செய்வார்கள் என்று உறுதியாக இருந்தேன் என தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, 2008 ஐ.பி.எல் ஏலம் நடைபெறும் போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருந்த நான் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தேன். 
 
எனக்கு இருந்த சந்தேகம் அணிக்கு நான் சி.எஸ்.கே கேப்டனா? இல்லையா? என்பது தான். ஆனால் தோனி சென்னை அணிக்காக 1.5 மில்லியனுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று கூறினார். மேலும் சென்னைக்காக விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments