Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.5 மில்லியனுக்கு தோனி; ஒன்னுமில்லாமல் போன நான்: தினேஷ் கார்த்திக்!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (17:20 IST)
சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று தினேஷ் கார்த்திக் வருத்தம். 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது இந்திய அணியின் சச்சின் மும்பை அணிக்கும், கங்குலி கொல்கத்தா அணிக்கும், சேவாக் டெல்லி அணிக்கும், டிராவிட் பெங்களூரு அணிக்கும் தலைமையேற்று விளையாடினர். அதாவது அவர் அவர் அவர்களது சொந்த மண்ணிற்கு விளையாடினர். 
 
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தேர்வு செய்வார்கள் என்று உறுதியாக இருந்தேன் என தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, 2008 ஐ.பி.எல் ஏலம் நடைபெறும் போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருந்த நான் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தேன். 
 
எனக்கு இருந்த சந்தேகம் அணிக்கு நான் சி.எஸ்.கே கேப்டனா? இல்லையா? என்பது தான். ஆனால் தோனி சென்னை அணிக்காக 1.5 மில்லியனுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று கூறினார். மேலும் சென்னைக்காக விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments