Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிஎஸ்கே அணியில் எடுக்காதது ஈட்டியால் குத்தியது போல இருந்தது! ஆதங்கத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர்!

சிஎஸ்கே அணியில் எடுக்காதது ஈட்டியால் குத்தியது போல இருந்தது! ஆதங்கத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர்!
, வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:50 IST)
இந்திய அணியில் விளையாடி வரும் வீரரான தினேஷ் கார்த்திக் தான் தனது சொந்த மாநிலத்தின் அணியான சிஎஸ்கேயில் தேர்வு செய்யப்படாதது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியில் விளையாட எல்லாத் தகுதிகளும் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியாதது குறித்து வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் ‘2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தேர்வின் போது சி எஸ் கே அணியில் என்னைக் கண்டிப்பாக தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். எனக்கிருந்த சந்தேகம் நான் கேப்டனா? இல்லையா என்பதுதான். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக தோனியை தேர்வு செய்தார்கள். அது எனது நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல இருந்தது. ஆனால் இப்போதும் தோனி தலைமையில் சி எஸ் கே அணியில் விளையாட தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1.5 மில்லியனுக்கு தோனி; ஒன்னுமில்லாமல் போன நான்: தினேஷ் கார்த்திக்!