Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல்வியே அடையாத திண்டுக்கல் அணி: இன்று மீண்டும் வெற்றி

தோல்வியே அடையாத திண்டுக்கல் அணி: இன்று மீண்டும் வெற்றி
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (22:59 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் திண்டுக்கல் அணி ஏற்கனவே ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று காஞ்சி வீரன்ஸ் அணியுடன் மோதியது 
 
இன்றைய போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விஷால் வைத்யா 51 ரன்களும், லோகேஷ்வர் 26 ரன்களும், எடுத்தனர். 
 
இதனை அடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 134 ரன்கள் எடுத்து ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த் 61 ரன்களும், விவேக் 26 ரன்களும் ஜெகதீசன் 21 ரன்களும் எடுத்தனர்.
 
இன்றைய போட்டியின் முடிவுக்கு பின்னர் திண்டுக்கல் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஹரி நிஷாந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை தூத்துக்குடி மற்றும் திருச்சி அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரோ கபடி 2019: டெல்லி, புனே அணிகள் வெற்றி