Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி விரைவில் ஓய்வு - ரவி சாஸ்திரி அதிர்ச்சி கருத்து !

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (16:10 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அனியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார். ஆனால் அவரை சேர்க்காமல் நிர்வாகம்தான் ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அவருக்குப் பதில் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரைத் தயார் செய்து வருகின்றனர் கோலியும், ரவி சாஸ்திரியும். இந்நிலையில் தோனி மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றி தெரிவித்துள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘ தோனியின் ஓய்வு பற்றி நாங்கள் இருவரும் கலந்தாலோசித்தோம். அவரது டெஸ்ட் வாழ்க்கை முடிந்துள்ளது. விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் ஓய்வை அறிவிப்பார். இந்த வயதில் அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார். இனி ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடி அவ உடல் எப்படி ஒத்துழைக்கிறதோ அதைப் பொறுத்துதான் அவர் தொடர்ந்து விளையாடுவது.’ எனக் கூறியுள்ளார்.

இதனால் இனி தோனியை ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும்தான் பார்க்க முடியும் என்ற சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments