Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற டெல்லி: பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்

Advertiesment
ஐபிஎல் 2019
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (19:41 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று 40வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்ததால் இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய ராஜஸ்தான் அணியில் ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ரியான் பராக், அஷ்டான் டர்னர், பின்னி, ஸ்ரேயாஸ் கோபால், ஆர்ச்சர், உனாகட் மற்றும் குல்கர்னி ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் டெல்லி அணியில் பிரித்திவ்ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலின் இங்க்ராம், அக்சார் பட்டேல், ரூதர்போர்டு, கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா, ரபடா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர்.
 
webdunia
ராஜஸ்தான் அணி மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி 6ல் தோல்வியும் 3ல் வெற்றியும்  பெற்று 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 10 போட்டிகள் விளையாடி 6ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி வெற்றி பெற்றால் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டிப்பாப்பாவுக்காக ஒரு ரன் எடுக்காமல் விட்டு கொடுத்தாரா தோனி?