Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புரோ கபடி போட்டி: புனே, டெல்லி அணிகள் வெற்றி!

புரோ கபடி போட்டி: புனே, டெல்லி அணிகள் வெற்றி!
, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (22:17 IST)
புரோ கபடி போட்டிகள் ஆறாவது வாரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய இரண்டு போட்டிகளில் புனே மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன 
 
 
இன்றைய முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பெங்கால் அணியும் மோதின. இந்த போட்டியில் முதல் பாதி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், இரண்டாம் பாதியில் புனே அணியினர் சுதாரிப்புடன் விளையாடியதால் அந்த அணி 34 புள்ளிகளை எடுத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 27 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால், 7 புள்ளிகள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது.
 
இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி அணியும் பாட்னா அணியும் மிகக் கடுமையாக மோதினர். கடைசியில் டெல்லி அணி 38 புள்ளிகளும், பாட்னா அணி 35 புள்ளிகளும் எடுத்ததால், 3 புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது 
 
 
இன்றைய போட்டிக்கு பின்னர் டெல்லி அணி மொத்தம் 49 புள்ளிகள் பெற்று தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் பெங்கால் பரணியும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் அணியில் உள்ளனர். தமிழ்தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை பெற்று வருவதால் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பந்துவீச முடிவு!