Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீப்பிடித்த விமானத்தில் உயிர் தப்பிய பயணிகள்..

தீப்பிடித்த விமானத்தில் உயிர் தப்பிய பயணிகள்..
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (13:50 IST)
உத்தர பிரேதசத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்தது.

தனியாருக்கு சொந்தமான ஒரு சிறிய விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து தானிபூர் விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் தரையிறங்கியபோது, நிலைதடுமாறி ஓடுதளத்தை ஒட்டியுள்ள பகுதியில் விழுந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் விமானத்தில் இருந்த 6 பேரையும் மீட்டனர்.

அவர்கள் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் ஒரு சக்கரம், கம்பி வேலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு மருத்துவர்கள் போராட்டம்: ஆதரவாய் களமிறங்கும் டிடிவி தினகரன், முக ஸ்டாலின்