Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொனால்டோ பாணியில் கோலா பாட்டில்களை எடுத்த வார்னர்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:00 IST)
ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மேஜை மீது இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்து கீழே வைத்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ. அப்போது மேடை இருந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்த அவர் தான் தண்ணீர் மட்டுமே குடிப்பதாகவும்  கார்போனேட் தண்ணீர்களை குடிப்பதில்லை என்றும் கூறினார். இதனால் கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு பல நூறுக் கோடிகள் சரிந்தது.

இந்நிலையில் நேற்றும் இதுபோல ஒரு சம்பவம் நடந்தது. நேற்று சிறப்பாக விளையாடிய ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரும் அதே போல மேஜை மீதிருந்த கோலா பாட்டில்களை எடுத்து அப்புறப்படுத்தினார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த பாட்டில்களை மேஜை மீது வைத்தார். அப்போது ‘ரொனால்டோவுக்கு போதுமானதாக இருந்தால் எனக்கும் போதும்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments