Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த ஆண்டு சிஎஸ்கே தக்க வைக்கும் 3 வீரர்கள் இவர்கள் தான்!

அடுத்த ஆண்டு சிஎஸ்கே தக்க வைக்கும் 3 வீரர்கள் இவர்கள் தான்!
, ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (16:09 IST)
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ளதால் ஒட்டுமொத்த ஏலம் நடைபெறும் என்பதும் ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதி அமல்படுத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதி அமல்படுத்தப்பட்டால் சிஎஸ்கே தக்கவைத்துக்கொள்ளும் மூன்று வீரர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
இந்த ஆண்டு கோப்பையை பெற்றுக் கொடுத்து தல தோனி, ஜடேஜா மற்றும் ருத்ராஜ் ஆகிய மூவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தக்கவைத்துக் கொள்ளும் என்றும் சிஎஸ்கே அணியின் வட்டாரங்கள் கூறுகின்றன. ஒருவேளை ஒரே ஒருவரை மட்டும் தக்கவைத்துக் கொள்ளும் நிலை வந்தால் தோனியை தக்க வைத்துக் கொள்வோம் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
எனவே அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக தல தோனி விளையாடுவது உறுதி என்றும் 3 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் தோனி, ருத்ராஜ் மற்றும் ஜடேஜா அணியில் இடம்பெறுவது உறுதி என்றும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிராவிட் பத்தி சொல்லலை.. ஆனா தோனி இருப்பது நம்பிக்கை! – விராட் கோலி!