Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் தலைவன் தோனி ஒருவர் போதும்: சிஎஸ்கே அணியின் சிஇஓ பேட்டி

Advertiesment
என் தலைவன் தோனி ஒருவர் போதும்: சிஎஸ்கே அணியின் சிஇஓ பேட்டி
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:39 IST)
சிஎஸ்கே அணியில் இருந்து எத்தனை வீரர்கள் விலகினாலும் என் தலைவன் தோனி ஒருவர் அணியை காப்பாற்றுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
இந்த ஆண்டு சிஎஸ்கேக்கு பெரும் சோதனையாக இருக்கும் என்றும் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகிய இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி விட்டதாகவும் மேலும் ஒரு சில வீரர்கள் கொரோனாவால் பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியை தல தோனி எப்படி வழி நடத்துவார்? என்ற ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது
 
ஆனால் இந்த செய்திகள் குறித்து பேட்டியளித்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அவர்கள் ’என் தலைவன் தோனி ஒருவர் போதும். அவருக்கு இருக்கும் வீரர்களை வைத்து எப்படி அணியை திறமையாக வழிநடத்திக் கொண்டு செல்வது என்பது தெரியும். திறமையான கேப்டன் தோனி இருக்கும்போது எனக்கு எந்தவித கவலையும் இல்லை. கண்டிப்பாக அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வார்’ என்று கூறினார்.
 
மேலும் சென்னை அணி வீரர்கள் தற்போது பயிற்சியை தொடங்கி விட்டார்கள் என்றும், அனைவரும் துடிப்புடன் இருக்கிறார்கள் என்றும், கண்டிப்பாக இந்த முறை சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் என்று அவர் கூறினார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேங்யூ அண்ட் ஐ எம் சாரி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜோகோவிச் வருத்தம்!