Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பு....ரசிகர்கள் மகிழ்ச்சி

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பு....ரசிகர்கள் மகிழ்ச்சி
, வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:25 IST)
ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்தப் போட்டி வெவ்வேறு நாடுகளில் ஒலிம்பிக் கமிட்டி நடத்தி வருகிறது.

கடந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில்  நடைபெற்றது.

இந்த போட்டியில் அமெரிக்கா, இந்தியா,சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், அமெரிக்கா அதிகப் பதக்கங்கள் கைப்பற்றி முதலிடம் பெற்றது.

இந்த ஒலிம்பிக் போட்டியில், தடகளம், ஹாக்கி, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இருக்கும் நிலையில், வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.

இதில், கிரிக்கெட்டை சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.அதேபோல், பேஸ்பால், ஸ்குவாஷ், ஷாப்ட்பால், பிளாக் புட்பால் ஆகிய 4 போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ரசிகர்கள் கேலி செய்ததால் மைதானத்திலேயே அழுத ஆஸ்திரேலிய ரசிகர்!