Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கங்குலி கேப்டனாக இருக்க விரும்பினார்… ஆட்டத்திறனை மேம்படுத்தவில்லை – கிரேக் சேப்பல் சர்ச்சை கருத்து!

கங்குலி கேப்டனாக இருக்க விரும்பினார்… ஆட்டத்திறனை மேம்படுத்தவில்லை – கிரேக் சேப்பல் சர்ச்சை கருத்து!
, வெள்ளி, 21 மே 2021 (09:01 IST)
கங்குலி இந்திய அணியில் ஒரு கேப்டனாகவே இருக்க முயற்சி செய்தார் என முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

இந்தியாவின் வெற்றிக் கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. சூதாட்ட சர்ச்சைகளால் சீர்குலைந்த இந்திய அணியை கட்டமைத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றவர். 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் அணியில் இருந்து சிலகாலம் விலக்கப்பட்டார். அவரின் கேப்டன் பதவியும் பறிபோனது. இதற்கெல்லாம் காரணம் அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல்தான் என சொலல்ப்பட்டது.

இதுகுறித்து இப்போது பேசியுள்ள சேப்பல் ‘கங்குலிதான் என்னை இந்தியாவின் பயிற்சியாளராக இருக்க அனுகினார். நானும் 2 ஆண்டுகள் இந்தியாவில் இருந்து கடுமையான சவால்களை எதிர்கொண்டேன். கங்குலி கடினமாக உழைக்க விரும்பவில்லை. அணியில் ஒரு கேப்டனாக இருந்து அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே விரும்பினார்’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் இரங்கல்!