Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் சதீஷ்குமார் சிவலிங்கம்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (12:12 IST)
ஆஸ்திரேலியாவில் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில், இந்தியாவின் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்றுள்ளார். 77 கிலோ எடைப் பிரிவில் பங்குபெற்றார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

 
இந்நிலையில் சீனியர் பிரிவில் போட்டியிட்ட சதிஷ்குமார், இந்தியாவுக்குத் தங்கம் வென்று தந்துள்ளார். சதீஷ்குமார் முறையே  148 கிலோ மற்றும் 172 கிலோ என மொத்தம் 320 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். மற்றொரு பிரிவான பளுதூக்குதல்  ஜூனியர் பிரிவில், இந்தியாவின் மற்றொரு வீரரான ராகுல், தங்கம் வென்று அசத்தினார். 
 
இந்த வெற்றியின்மூலம் சதீஷ்குமார் மற்றும் ராகுல் இருவரும், அடுத்த 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளுக்கு இடையேயான போட்டியில் விளையாட நேரடியாக தகுதிபெற்றுள்ளனர். 
 
சதீஷ்குமார் சிவலிங்கம் 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments