Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிகிச்சையில் உயிர்பிழைத்த நியுசிலாந்து வீரர்!

சிகிச்சையில் உயிர்பிழைத்த நியுசிலாந்து வீரர்!
, வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:25 IST)
முன்னாள் நியுசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் உயிருக்காக போராடி வந்த நிலையில் இப்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்காக 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும், 60 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய அல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ். இவர் மேல் மேட்ச் பிக்ஸிங் புகார்கள் எழுந்த நிலையில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.

ஆனால் பொருளாதார நிலை காரணமாக லாரிகள் சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது அவர் இதய பாதிப்பு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெறப்படுகிறார். இது சம்மந்தமாக நியுசிலாந்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இரு வார சிகிச்சையில் இப்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளார். அவருக்கு பொருத்தப்பட்ட உயிர்காக்கும் கருவிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் தன் குடும்பத்தினருடனும் பேசியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளி வென்ற வீராங்கனை பதக்கத்தை ஏலம் விட்டார். எஸ்பி அர்ஜூன் சரவணன் வாழ்த்து!