Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் பதிவான 36,000 தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

ஒரே நாளில் பதிவான 36,000 தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
, வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (09:41 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,571 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,23,58,829ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 540 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,33,589ஆக உயர்ந்தது.
 
அதேபோல கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 39,555 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,61,635 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,65,605 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 57,22,81,488 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரும்பிய தாலிபன்கள் - இனி ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கும்?