Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.ஐ கால்பந்து: சென்னை அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (20:41 IST)
கடந்த சில நாட்களாக ஐஎஸ்எல் கால்பந்து போட்டி தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மற்றும் ஏடிகே அணிகள் மோதிய ஒரு போட்டி நேற்று நடைபெற்றது 
 
இந்த போட்டி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஏடிகே அணி சென்னை அணியை வீழ்த்தியது 
 
ஏடிகே அணி ஒரு கோலும் சென்னை அணி கோல் எதுவும் போடவில்லை என்பதால் 1-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணி வெற்றி பெற்றது 
 
ஏற்கனவே சென்னை அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியை டிராவும் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் ஒரு வெற்றியைக் கூட சென்னை அணி பெறாததால் புள்ளி பட்டியலில் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது 
 
சென்னை அணியை வீழ்த்திய ஏடிகே அணி 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என கால்பந்து ரசிகர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments